சந்திரனின் தோற்றம்

CURRENT MOON

பெண்ணின் பிரேதத்தை பெண்ணே பரிசோதனை செய்ய வேண்டும் ! கோரிக்கைக்காக MMMK நடத்திய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

 பெண்ணின் பிரேதத்தை பெண்ணே பரிசோதனை செய்ய வேண்டும் !
 கோரிக்கைக்காக MMMK நடத்திய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

வாழ்கின்ற காலத்தில் மற்ற ஆண்களின் கண்களுக்கு அஞ்சி வாழும் நம் பெண்களை இறந்த பிறகு போதையில் பிணத்தோடு உறவு கொள்ளும் கயவர்கள் இருக்கும் காலத்தில் அவர்களிடம் விடலாமா? ஆகையால் பெண்ணின் பிரேதத்தை பெண்களே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனும் மதங்களைக் கடந்த ஒரு மனித நேயக் கோரிக்கையை முன் வைத்து மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை நடை பெற்றது !   MMMK வின் மாநிலத் துணைத்தலைவர் சாதிக் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் சகோதரர் செங்கிஸ் கான் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அப்போது அவர் ' வாழும் காலத்தில் தன் வீட்டுப் பெண்ணை யாரவது தொட்டு விட்டால் அல்லது கை தவறிப் பட்டுவிட்டால் கூட கொந்தளிக்கும் நாம், பட்டால் என்ன பார்த்தால் சண்டைக்கு செல்லும் நாம் , இறந்த பின்னால் நம் சகோதரிகளை அம்மணமாக அறுக்க சம்மதிக்கலாமா? ஒரு கற் சிலை அவமதிக்கப்பட்டால் கொந்தளிக்கிற இந்த சமுகம் கற்புநெறி பேணி வாழ்ந்த, அல்லது கணவன் மட்டுமே பார்த்த உடலை கண்டவனும் காண அனுமதிக்கலாமா? இதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளுமா? என உணர்சிகரமகப் பேசினார்.

நிறைவுரை ஆற்றிய MMMK வின் மாநிலத் தலைவர் பாளை  ரபிக் அவர்கள் பல்லடத்தில் மதுவின் போதையால் பிரேதப் பரிதனைக் கூடத்தில் இருந்தவன் அதைப் புனர்ந்ததோடல்லாமல் மார்பத்தை  அறுத்து எறிந்த சம்பவத்தை எடுத்துக் கூறினார்.    
ஆகையால் சட்டத்தை மாற்றுங்கள் பெண்களின் கண்ணியம் என்பது வாழும் போடு மட்டுமல்ல மரணத்திற்கு பின்னும் உள்ளது ஆகையால் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு பெண் முதல்வராகிய நீங்கள் சட்டத்தை மாற்றுங்கள்! அரசு மருத்துவ மணிகளில் பெண்களை ஸ்கேன் செய்யும் பணிகளில் பெண்களை நியமியுங்கள் ! எனக் கோரிக்கை விடுத்தார். 

காலை 11 முதல் மதியம் 1மணி வரை இந்த ஆர்பாட்டத்தில் MMMK வின் மாநில மாவட்ட நிர்வாகிகள், இமாம்கள், பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட   ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோசங்கள்  எழுப்பினர்!  

















   
12.5.13 | 0 comments | Read More

இது கொள்கைக் கூட்டணியா ?

இது கொள்கைக் கூட்டணியா ?


24 அமைப்புகள் பேசுவது போலி ஒற்றுமை 
கொள்கை அடிப்படையில் ஒன்று சேர முடியுமா ? 
தர்காவாதியோடும் வரதட்சணை வாங்குபவனும் ,
மவ்லீது ஒதுபவனும் ஒரு மேடையில் பேசுவது
போலி ஒற்றுமை அதனால் எந்த நன்மையையும்
விளையாது எனும் ததஜ சகோதரர்களே!

தர்காவாதி ஹாரூனும் , மவ்லிது ஹத்தம்
பாத்திஹாவை சரி காணும் தேசிய லீக் பஷீரும்
நீங்களும் சேர்ந்தது கொள்கை அடிப்படையிலா ?

அப்போ நீங்க தர்காவாதியோட கை கோர்த்தா
அது கொள்கைக் கூட்டணி !
மற்றவர்கள் சேர்ந்தால் அது கோமாளிக் கூட்டணியா ?

நீங்க மவ்லிது கத்தம் பாத்திஹா கூடும்
என்பவரோடு சேர்ந்தால் அது இட ஒதுக்கீடு
எனும் பொது நன்மைக்காக!

மற்றவர்கள் பொதுப் பிரச்சனைகளுக்காக
ஒன்று சேர்ந்தால் அது அரசியல் ஆதாயத்திற்காகவா?

நீங்கள் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும்
ஒட்டுக்கேட்டால் அது ஏகத்துவம் !
முஸ்லிம்களுக்காக முஸ்லிம்கள் கேட்டால்
அரசியல் சாக்கடையா ?

எப்படி உங்களால் மட்டும் இப்படி சித்திக்க முடிகிறது
அடுத்தவர்களை பேச முடிகிறது?

சிந்தியுங்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி
நன்மையிலும் இறையச்சத்திலும் உதவுங்கள்!
தீமையிலும் வரம்பு மீறலிலும்
யாரும் யார்க்கும் உதவ வேண்டாம்!
12.5.13 | 0 comments | Read More

ததஜவினரே உங்க பிரச்னை தான் என்ன?


ததஜவினரே உங்க பிரச்னை தான் என்ன? 

முதல்ல ஒரு காலத்திலேயும் ஒன்று படவே முடியாது! 
எங்களை எதிர்ப்பதற்காக வேணும்னா அவ்வளவு பெரும் ஒன்று சேர்வார்கள் ஒரு பொதுப் பிரச்சனைக்கு எல்லாரும் ஒன்னு சேர முடியுமா? சேர்ந்து காட்டுங்கள் என்றீர்கள்!

கட்டாயப் திருமண பதிவுச் சட்டம், காதியானிகள் எதிர்ப்பு
அமெரிக்க தூதரக முற்றுகை, விஸ்வருபம் எதிர்ப்பு
அப்பாவி முஸ்லிம்கள் கைதுக்கு எதிர்ப்பு என ஒன்னு சேர்ந்து காட்டிய பிறகு கொள்கை அடிப்படையில் ஒன்னு சேர முடியுமா ? என்கிறீர்கள்

கொள்கை ரீதியா குடும்பத்தில கூட ஒன்னு சேர முடியாது அதுக்காக குடும்பத்தை விட்டு வந்துட்டீங்க்களா? பிரச்னை ரீதியாகத் தான் ஒன்னு சேர முடியும் அப்படித்தான் இட ஒதுக்கீடு விசயத்துல கூப்பிடறீங்க! அப்ப நீங்களும் கொள்கை ரீதியா ஒண்ணா உள்ளவங்களைக் கூப்பிட்டு ஆர்பாட்டம் போராட்டம் நடத்துங்க!
11.5.13 | 0 comments | Read More

ஒண்ணாகக் கூடுங்க பார்ப்போம்! என சவால் விட்டவர்களின் எண்ணத்தை மண்ணாக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!


எங்கள விடுங்க மத்த எல்லாரும் 
ஒரு பிரச்சனைக்கு ஒண்ணாகக் கூடுங்க பார்ப்போம்!
என சவால் விட்டவர்களின் எண்ணத்தை மண்ணாக்கிய 
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! 


கட்டாயப் திருமண பதிவுச் சட்டம், காதியானிகள் எதிர்ப்பு 
அமெரிக்க தூதரக முற்றுகை, விஸ்வருபம் எதிர்ப்பு 
அப்பாவி முஸ்லிம்கள் கைதுக்கு எதிர்ப்பு என 
அடுத்தடுத்து அநீதிக்கு எதிராக அல்லாஹ்வின் கயிற்றை 
பற்றிப் பிடித்த தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி !
11.5.13 | 0 comments | Read More

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு ஆர்எஸ்எஸ் தலைவருடையது!


பெங்களூரு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சிம்கார்டு ஆர்எஸ்எஸ் தலைவருடையது! 

பெங்களூர் மல்லேஸ்வரம் பாஜக அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் செல்போன் சிம்கார்டு ரிமோட் கன்ட்ரோலாக பயன்படுத்ததப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும் குண்டுவெடிப்புக்கு முதல் நாள், அந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் செல்போன் திருடு போனதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தமிழகத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

thanks to thoodhuonline.com

குண்டு வச்சவன கண்டு பிடிக்க துப்பில்லாம
முஸ்லிம பிடிச்ச துப்புகெட்ட காவல் 'துரைகளே'
உங்களுக்கெல்லாம் துப்பாக்கி எதுக்கு ? என காரித் துப்புங்கள் ! 
11.5.13 | 0 comments | Read More

ததஜ ரியாத் மண்டலத்தில் அரங்கேற்றப்பட்டுவரும் நாடகத்தின் கிளைமாக்ஸ்! பைசல், பரித் நீக்கம்!


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
   
 ததஜ ரியாத் மண்டலத்தில் அரங்கேற்றப்பட்டுவரும்  நாடகத்தின் கிளைமாக்ஸ்!
பைசல் ,பரித் நீக்கம்!


          முன்னர் ரியாத் மண்டலம் அதிரடியாகக் கலைக்கப்பட்டு நாடகம் 
துவக்கப்பட்டதை  நாம் அறிவோம்.ரியாத் மண்டலத்தலைவர் பைசல் உட்பட மாநில நிர்வாகிகள் பலரும் தலைமையை எதிர்த்ததாகவும்,ரியாத்திலிருந்து தாங்கள் வசூல் செய்து கொடுத்த பணத்தைப்பற்றி கணக்கு கேட்ததினால்  தலைமையை மதிக்காததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்கள்.இதனால் ரியாத் மண்டலத்தில் குழப்பம் ஏற்பட்டது. மாநில தலைமை மீதான அதிருப்தி மண்டலத்தின் பல்வேறு கிளைகளிலும் எதிரொலித்தது.ரியாத் அமீருத்தீனை மாநிலத்தலைமை கிளைகளுக்கு அனுப்பிவைத்து நிலைமையை சமாளித்தது.
           த த ஜா வின் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளுக்கு ரியாத் மண்டலம்தான் பெரிய அளவில் பெரும் உதவியைச் செய்துவருகிறது என்பதை மாநிலத்தலைமை மதிக்காமல் மூடி மறைத்து ஆடிய நாடகத்தால் சாதகமான நிலைமை ஏற்படாததால் மாநிலத்தலைமை பிரச்னையை சிறுது நாட்கள் ஆரப்போட்டது இங்கு ஆன்லைன் பீஜேயில் ஆடிய நாடகத்தைப் பற்றியும்,அடுத்து அவர்கள் எடுத்த நடவடிக்கைப் பற்றியும் உண்டான உண்மை நிலையைப் பார்ப்போம்.             
           சில வாரங்களுக்கு முன்னால் ரியாத் த த ஜவின் முக்கிய பொறுப்பிலுள்ளவர்களுடன் ஆன் லைனில் தமிழகத்திலுள்ள த த ஜ தலைமையிலிருந்து உரையாடல் நடந்துள்ளது அந்த உரையாடலில் தமிழகத்திலிருந்து சகோதரர் பீ ஜேயும்,எம் ஐயும்கலந்துகொண்டார்கள்.ரியாத் மண்டலத்தில்.சகோதரர் பைசல்,பரீத் போன்றோர்கள் கலந்து கொண்டார்கள்.அந்த உரையாடலில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்படவேண்டும் அப்போது தான் நாம் ரியாத்தில் செயல்பட முடியும் என்று பீஜே சொல்ல பைசல் அன் கோஷ்டியினர் எங்களின் மீது தவறான குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள் நாங்கள் என்ன தவறுகள் செய்தோம் என்று கேட்க அதெல்லாம் ஒன்றுமில்லேமா நீங்கள் தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டீர்கள் தலைமைக்கு கட்டுப்படவேண்டாம்மமா அதனால்தான் இந்த நடவடிக்கை எடுத்தோம்.என்று சொல்ல பைசல் அன் கோஷ்டியினர் நாங்கள் என்ன எதிர்த்துக் கேட்டோம் சொல்லுங்கள் என்று  கேட்க அதெல்லாம் ஒண்ணுமில்லேமா நீங்கள் மோசடியா பண்ணிட்டீங்கள் தலைமையை எதிர்த்தீர்கள் அதனால்தான் என்று மழுப்பலான தகவலைத்தர அத்துடன் அந்த விவாதங்கள் முடிந்து விட்டது.தற்போது ரியாத் மண்டலத்திற்கென்று  நாங்கள் நான்கு நபர்களைநியமிக்கிறோம்.அவர்களின் கீழ் செயல்படுங்கள்.இன்ஷாஅல்லாஹ் தமிழகத்தில் பொதுக்குழு கூடி புதிதாகபொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து பின் ரியாத்திற்கு பொறுப்பாளர் ஒருவரை அனுப்பிவைத்து ரியாத்தில் பொதுக்குழு கூடி மண்டலத்திற்கென்று பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்போம் அப்போது உங்களைத்தேர்ந்தெடுத்தால் நல்லதுதானே என்று பீஜே சொன்னார்.நீங்களெல்லாம் ஒன்றாக செயல்பட்டு நன்றாக தஃவா பணியில் ஈடுபடுங்கமா என்றும் சொன்னார்.

             பைசல் அவர்கள் தஃவா பணிகள் நடக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அங்குள்ள நிர்வாகிகளை  சமாதானப் படுத்தி நாம் செயல் படுவோம் என்று சொன்னதும் அங்கிருந்த சகோதரர்கள் சமாதானமானார்கள்.பின்பு மாநிலத்தலைவர் அவர்கள் ரியாத் மண்டல அமீருத்தீன் தலைமையில் பொறுப்பாளர்கள் நான்கு  பேரின் பெயர்களைஅறிவித்தார்கள்.அறிவித்தவுடன் அதில் ஒரு சிலர்கள்எங்களிடம் கேட்காமல் எப்படி போடலாம் என்று எதிர்ப்புதெரிவிக்க இந்தமாதிரி  கேள்வி கடையநல்லூரைத் தவிரவேறு எங்கும் தன்னைப்பார்த்து கேட்க முடியாது என்றிருந்தபீஜே அவர்கள் இந்த கேள்வியைக் கேட்டவுடன் தன்னுடைய வெப் சைட்டை ஆப் செய்துவிட்டார்.இந்த சம்பவம் இப்படி நடந்து விட்டதே என்று அமீருத்தீன் அவர்கள் சகோதரர் பைசல்,பரீத் மற்றும் தேர்ந்தெடுக்கப்படவிருந்த நான்கு பேர்களையும் சமாதானப்படுத்தி   மீண்டும் தலைமைக்குத் தொடர்புகொண்டு அந்த நான்கு பேரையும் பொறுப்பில் போடப்பட்டது.இதுதான் அன்று நடந்தது.            

        தற்போது 24-04-2013 அன்று தேதியிட்ட  ஒரு மெயில் ததஜதலைமையகத்திலிருந்து  சகோதரர் அமீருத்தீன் போன்றவர்களுக்க
வந்துள்ளது அதில் தலைமைக்கு எதிராக செயல்பட்ட பைசலை ஒரு வருடத்திற்கு எந்த பொறுப்புக்கும்வரக்கூடாது,அடிப்படை உறுப்பினராகத்தான் இருக்கமுடியும் நடக்கவிருக்கும்பொதுக்குழுவிலோ நிர்வாகக் கூட்டத்திலோ கலந்துகொள்ளக்கூடாது,அவரை தஃவா பணிக்கோ,பயானுக்கோ யாரும் அழைக்கக்கூடாது,அவரும் எந்த தஃவா பணிக்குப் போகக்கூடாது அவரின் நடவடிக்கைகள் இந்தஒருவருடத்தில் எப்படி இருக்கும் என்று பார்த்து அடுத்துதான் அவர் பழையமாதிரி பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படலாம்.என்று அந்த மெயிலில் எழுதப்பட்டுள்ளது. மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது நீங்களெல்லாம் எந்த மோசடியும் செய்யலேமா தலைமையை எதிர்த்து கேள்வி கேட்டுவிட்டீர்கள் இதுதான் நீங்கள்  செய்த தப்பு பொதுக்குழு கூடும்போது உங்களேயே தேர்ந்தெடுத்தால் நல்லதுதானம்மா என்று சொல்லிவிட்டு தற்போது அவரையும்,பரீதையும் நீக்கிவிட்டு பொதுக்குழு நடத்தக் காரணம் என்னஅப்போ அவர்கள் கேட்டுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாதுதங்களின் குட்டு  மற்றவர்களிடம் வெளிப்படித்திவிடும் என்று பயந்துதான் பொதுக்குழு கூட்ட எத்தனிக்கின்றீர்கள். இதுதான் உங்களின் நியாயமோ! அல்லாஹ் அறிவான்.இதற்காக ஒருவருடம் காத்திருப்போம்,மூன்றுமாதம் காத்திருப்போம் என்று இந்த இருவர்களும் நினைத்திருந்தால் இவர்களைப் போன்றுள்ள முட்டாள்கள் யாராக இருக்கமுடியும்?

               பைசல்அவர்கள் இந்த ததஜ கட்சிக்காக எவ்வளவு பாடுபட்டவர் என்பது ரியாத் மண்டலத்திலுள்ளவர்களுக்கும்,ததஜ தலைமைக்கும் நன்றாகத் தெரியும். தமுமுகவிலிருந்து இவர்கள் வெளியே வந்து தௌஹீத் ஜமாஅத் ஆரம்பிக்கும் போது ததஜ கென்று ரியாத்தில் ஒருஆள் கூட கிடையாது.ரியாத்தில் ததஜாவுக்கு கடுமையாக உழைத்து அதற்கு ஒரு முகவரி கொடுத்தது பைசலும் பஷீர்மௌலவிதான். இது உலகறிந்த உண்மை இப்போதுள்ளசின்னப்பசங்களுக்குத் தெரியாது இந்த இரண்டு பேருமே தற்போதுநீக்கப்பட்டவர்கள்தான்அதற்காக நாங்கள் தலைக்குமேல் வைத்துஆடமுடியுமா?என்ற கேள்வி த த ஜ கேட்கலாம் என்ன அப்படி நடந்தார்கள் குர் ஆன்,ஹதீசுக்கு மாற்றமாக செயல்பட்டார்களாஇப்படியே காலம் காலமாக உழைத்த அனுபவ சாலிகளை  நீக்கி நீக்கி சின்னப்பயல்களை தலைமைக்கு தேர்ந்தேடுத்ததினால்தான் இன்று ததஜ ஏழரையாகப்   போய்கொண்டிருக்கிறது என்பதை ததஜ அறிந்துகொள்ளட்டும்.சகோதரர் பைசல். திருமணம் முடித்து பல ஆண்டுகளாகியும் இதுவரை அவருக்கு எந்த குழந்தையும் இல்லை குழந்தையைக் கொடுப்பது அல்லாஹ்தான் என்பதில் வேறு கருத்து இருக்கமுடியாது. ஆனால் திருமணமாகி பல வருடங்களாகி விட்டது அவர் சரியாக தன் மனைவியை சந்தித்தது இல்லை காரணம் அவர் குழந்தைக்காகத் தான் ரியாத்தில் குடும்பத்தோட தங்கியிருந்தார்.தங்கியிருக்கும் காலமெல்லாம் ததஜ நிகழ்ச்சிஎன்றால் உடனே ஓடிப்போய் காரியத்தில் இறங்குவார் இரவு பகல் என்று பாராமல் உழைத்து தன்  மனைவியைக்கூட கவனிக்காமல் விடுவார் அவருடைய மனைவிகூட சிலநேரங்களில் அவரிடம் வருத்தப்படுவதுண்டு.என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்  இப்போது அந்தப்பெண் மன நிறைவடைவார்கள் என்று எண்ணுகிறேன் .இனிமேலாவது பைசல் இவர்களை தெரிந்து கொள்ளட்டும்.இவர் தமுமுகவைவிட்டு வெளியே வரும்போதுகூட  தமுமுகவைச் சார்ந்த முக்கிய பிரமுகர் இவரைச் சந்தித்து யாருடைய மோகத்திலேயோ போகிறீர்கள் அவர்களின் பித்தலாட்டங்கள் வெகு விரைவில் தெரியப்போகிறது என்று சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.
பைசல்,பரீத் நீக்கத்திற்கான லட்டரை அட்டாச் பைலில் பார்க்கவும் 



11.5.13 | 0 comments | Read More

சமுதாயம் திரண்டது! சர்க்கார் மிரண்டது!


சமுதாயம் திரண்டது! சர்க்கார் மிரண்டது!


அப்பாவி முஸ்லிம்கள் மேல் பொய் வழ்க்கு போடும்
காவல் துறையைக் கண்டித்து இஸ்லாமிய 

இய்க்கங்களின் கூட்டமைப்பின் போராட்டத்தை 
தடுக்க முயன்ற அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் 
முறியடித்து அநீதிக்கு எதிராக அலைகடல் என திரண்ட மக்கள்!
போடாதே போடாதே பொய் வழக்குப் போடாதே !
உளவுத்துறையா களவுத்துறையா ?
காவல்துறையா காவித்துறையா ?
எனும் விண்ணதிரும் கோசமும் ,
எந்த மேடையும் ஏறி பேசியிராத எளிய தமிழில் பேசிய 
பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களின் கண்ணீரும் 
இன்றைய ஆர்பாடக் களத்தின் இரு வேறு உணர்வுகள்

எதற்கும் உணர்சி வசப்படாமல் பல்வேறு கருத்துக்களைக் கொண்ட இந்த 24 இயக்க கூட்டமைப்பை ஒருங்கிணைக்கும் அப்பல்லொ ஹனிஃபா அவர்கள் சிறைவாசிகளின் குடும்பத்தினர் வடித்த கண்ணீரைக் கண்டு உணர்ச்சி வசப்ப்பட்டு அரசுக்கு எதிராக எச்சரிக்கை ஆர்பரித்து எச்சரிக்கை விடுத்தது இன்றைய ஆர்பாட்டத்தின் உணர்ச்சிகளில் ஒரு துளியாகும்!
கூட்டமைப்பை உடைக்க சதி!
வேலையைத் துவங்கியது உளவுத் துறை !

கூட்டமைப்பில் உள்ள பெரிய ஜனத்திரளைக் கொண்டு வரும் 
சில மஹல்லா ஜமாஅத் ஆலிம்களிடத்திலும் நிர்வாகிகளிடத்திலும் 
தன சித்து வேலையை உளவுத்துறை காட்டி கைது என மிரட்டியதோடு 
ஏராளமான காவல்துறையினரையும் கைது செய்து கொண்டு போக
வாகனங்களையும் கொண்டு வந்து நிறுத்தி மிரட்டியது!
ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாத இயக்கத் தோழர்களும்
அநீதியை எதிர்ப்பதில் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டோம்
சேப்பாக்கத்தில் குவிந்தனர்! அல்ஹம்து லில்லாஹ் !

யா அல்லாஹ் அக்கிரமக்கார கூட்டத்திற்கு எதிராக
எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!


குண்டு வெடிச்சதும் துப்புக் கிடைக்கலைன்னு சொல்லிட்டு
குண்டு வேச்சவனைக் கண்டு பிடிக்க துப்பில்லாத காவல் துறை!
அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதா? தோழர் டி.எஸ்.எஸ்.மணி


அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காக 
எப்போதும் குரல் கொடுக்கும் 
அன்பு தோழர் விடுதலை ராசேந்திரன்! 
இன்றைய போராட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்

தமிம் அன்சாரியை தீவிரவாதி என்றீர்கள்
பல்வேறு போராட்டங்களுக்குப் பின் 
இன்றைக்கு இல்லை என்று வெளியே விட்டு விட்டர்கள்! 
இது தான் உங்கள் காவல் துறையின் லட்சணம் 
என காட்டமாக விமர்சிக்கிறார்!
மனித உரிமைகள் எங்கு பாதிக்கப்பட்டாலும்
உடனடியாக ஓடோடி வரும் 
மனித உரிமை போராளி ! மார்க்ஸ்

பல்லாண்டுகளாக சிறையில் வாடும் மக்களுக்காக 
சட்டப் போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர் புகழேந்தி ! 
இன்றைய போராட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்
எம்புள்ள ஜெயில்ல உள்ளவங்களுக்கு உதவுனது ஒரு தப்பா?
அதுக்காக அவனுக்கு கரண்டு ஷாக் வச்சு சித்ரவதையா?

எந்த மேடையும் ஏறி பேசியிராத எளிய தமிழில் பேசிய 
பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களின் கண்ணீர்
கல்லையும் கரைப்பதாக இருந்தது! 
கல் மனம் படைத்த காவல் துறையே!
அவர்களை ஏவி விட்ட ஆட்சியாளர்களே!
இவர்களின் பிரார்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!
அது ஆட்சி அதிகாரங்களை புரட்டிபோடும்!

நன்மையிலும் இறையச்சத்திலும் நீங்கள் 
ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! 
எனும் இறை வசனத்தின் படி 
வண்ணங்கள் வேறாக இருந்தாலும் 
எங்களின் எண்ணங்கள் ஒன்றுதான்! 
அது அப்பாவிகளின் விடுதலைதான் 
என அவரவர் கொடியோடு அணி திரண்ட
அடலேறுகளின் ஆர்ப்பரிப்பு!
அல்லாஹ் இந்த ஒற்றுமையை நீடித்து வைப்பாயாக!





11.5.13 | 0 comments | Read More

கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!



கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!


நேற்று முன்தினம் (08/05) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.


"வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.


இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.


தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.

செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.

எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார்.

கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான் பர்க்.

நன்றி
ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா?-பக்கம்
10.5.13 | 0 comments | Read More

கர்னாடக பா.ஜ.க தோல்வியும், கவுண்டமணி -செந்தில் காமெடியும்!


கர்னாடக பா.ஜ.க தோல்வியும்,

கவுண்டமணி -செந்தில் காமெடியும்!



நான் எட்டாப்பு பாஸ்ண்ணே , 
நீங்க பத்தாப்பு பெயில்ண்ணே 
பாஸ் பெரிசா பெயில் பெரிசா?
9.5.13 | 0 comments | Read More

அல்லாஹ்வின் படை திரளட்டும்! ஆட்சியாளர் உள்ளம் மிரளட்டும்!


அல்லாஹ்வின் படை திரளட்டும்!
ஆட்சியாளர் உள்ளம் மிரளட்டும்!



நாளை மே10 அன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.இப்போது வரை இதனை நிறுத்துவதற்கு காவல் துறை அதிகாரிகளால் பயங்கரமான முயற்சிகள் நடத்தபட்டுவருகின்றன.
9.5.13 | 0 comments | Read More

இன்றைய செய்தி: தமிழகத்தில் பான்பராக் குட்கா போன்றவற்றுக்கு தடை! -முதல்வர்




இன்றைய செய்தி:
தமிழகத்தில் பான்பராக் குட்கா 
போன்றவற்றுக்கு தடை! -முதல்வர் 
இஸ்லாத்தின் செய்தி ! 

போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும்! 
அது தடுக்கப்பட்டதாகும்! -நபி மொழி 

மக்கள் :
லாட்டரியைப் போல்,
பான் பாரக்கைப் போல்,
மதுவையும் தடை செஞ்சா 
உங்களுக்கு புண்ணியமாப் போகும்!
 
9.5.13 | 0 comments | Read More

இளையான்குடி புதூர் வபாத் செய்தி!- ஜஹாங்கீர் வபாத்!


இளையான்குடி புதூர் வபாத் செய்தி!

தரகன் உமர் இஸ்மாயில் மகனும், அஜ்மல் ,அனஸ் ,கமல் 
ஆகியோரின் சகோதரருமான ஜஹாங்கீர் வபாத் ஆனார்! 
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் 
9.5.13 
 காலை 9 மணிக்கு ராயப்பேட்டை 
கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது !

9.5.13 | 0 comments | Read More